திருவள்ளூர், நவ 11- ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்தணியில் நவ 9 அன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி தலைமையில் நடைபெற்றது. திருத்தணி பைபாஸ் சாலையில் நடை பெற்ற பிரச்சாரத்தை மாவட்டக் குழு உறுப்பினர் அப்சல் அகமத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள், பிருந்தாவனம், சின்னதுரை, செல்வி, சின்னபையன் ஆகி யோர் பேசினர். முருக்கம்பட்டு, மேல்முருக்கம்பட்டு, அலுமேலுமங்காபுரம், சிங்கராஜ புரம், மத்தூர் ஊராட்சி பி.ஆர்.பள்ளி, காந்தி நகர் வழியாக சென்று, சிருகுமி ஊராட்சியில் கே ஜி கண்டி கையில் பிரச்சாரத்தை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன் முடித்து வைத்து பேசினார்.