districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மாநிலப் பொதுச் செயலாளர் ச.சிவக்குமார், துணைத் தலைவர்கள் க.இளங்கோ, ஜி.சம்கிராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, சமந்தா, சென்னை உயர்நீதிமன்ற தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் அறிவழகன், செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் தலைவர் பால் கனகராஜ்,  பார் கவுன்சில் உறுப்பினர் வேல்முருகன், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் பார்வேந்தன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணை தலைவர் ரஜினிகாந்த், மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார், அய்யாதுரை, ராஜாராம் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.