தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஏப்.27) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் சிறந்த சேவை ஆற்றிய சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல், தீயணைப்பு மற்றும் சிறைத் துறை அலுவலர்கள் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கினார். அமைச்சர்கள் க. பொன்முடி, செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, விழுப்புரம் ஆட்சியர் சி. பழனி ஆகியோர் உடனிருந்தனர்.