சிதம்பரம், செப். 22- 63 நாயன்மார்களில்ஒருவரான நந்த னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி காட்டு மன்னார்குடி பேருந்து நிலையம்அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு கலந்துகொண்டு தீண்டாமை கொடுமைக்கு தீக்கிரையான நந்தனின் நெருப்பை கையில் ஏந்துவோம், தீண்டாமையை தீயிக்கு இரையாக்கு வோம்என்ற தலைப்பில் நினைவேந்தல் உரையாற்றினார். இதனைதொடர்ந்து மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம், சிங்கார வேலு, விமலக்கண்ணன், தினேஷ் பாபு மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நந்தனாரின் வாழ்வியல் குறித்து பேசினார். கட்சியின் கிளை செய லாளர்கள் நீலமேகன், மணிகண்டன் ராஜ சேகர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.