சென்னை,மார்ச் 12- சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாண வர்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் (50) மீது 23 வயது மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த டிசம்பரில் பாலியல் புகார் அளித்தார். அதில் அவர், கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ‘வாட்ஸ்-அப்’ வாயிலாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இந்த புகார் மனுவின் பேரில் அவர் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உடனே முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடற்கல்வியியல் பயிற்சி மாண வர்கள் கடந்த மாதம் கல்லூரி வளா கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் 8 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு விசாரணையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், தான் உடற் பயிற்சியில் ஈடுபட்டி ருந்தபோது பாலியல் ரீதியாக ஜார்ஜ் ஆபிரகாம் அத்துமீற முயன்றார் என்று புகாரை அளித்தார். அதையடுத்து அந்தக்குழுவின் பரிந்துரையின் பேரில் அந்த மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் முதல்வர் மீது அனைத்து மகளிர் காவலர்கள் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்திலுள்ள குடியிருப்பில் தங்கியிருந்த அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவலர்கள் கைது செய்தனர்.