திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் (உறுப்பு) கல்லூரி கட்டிடம் முறையான பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. 800 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில் முதல்வர், 30 பேராசிரியர்கள், 4 தற்காலிக அலுவலர்கள் என சுமார் 35 பேர் பணியாற்றுகின்றனர். எனவே உடனடியாக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.