137 வது மேதின பேரணி திங்களன்று (மே 1) சின்மையாநகரில் தொடங்கி கோயம்பேடு வரை சிஐடியு - ஏஐடியுசி தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன் , ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆ.பாஸ்கர், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில துணைச் செயலாளர் ஏ.நடராஜன், மெப்ஸ் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாதிக்பாட்ஷா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.அழகேசன், எம்.தனசேகர் (டிஈன்இடபிள்யூஎப்), எஸ்.சவரிமுத்து (ஜிஐஇஏஐஏ), ஆட்டோ டாக்சி சங்க பொதுச்செயலாளர் டி.சுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர்.