districts

சென்னை முக்கிய செய்திகள்

வாஞ்சிநாதன் நினைவு தினம்

தென்காசி, ஜூன் 17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வீர வாஞ்சிநாதன்  நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க வட்டாரச் செயலாளர் வி.பழனி தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.வேலு மயில், கலை இலக்கிய மன்றம் சார்பில் என்.பால்ராஜ் கபிலர்,  மாதர்சங்க மாவட்டத் தலைவர் எம். ஆயிஷா பேகம்,    வாலிபர் சங்க தென்காசி தாலுகா  தலைவர் மூர்த்தி , தாலுகா செயலாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.


ஊத்தங்கரையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

கிருஷ்ணகிரி,ஜூன் 17- ஊத்தங்கரை வட்டத்தில் நீண்ட நாட்களாக மகளிர் காவல் நிலையம் இல்லாமல் இருந்ததால், நீண்ட தூரம் பயணித்து பர்கூர் அல்லது கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டிய சிரமம் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரையில் உருவாக்கப்பட்ட மகளிர் காவல் நிலையம் திறக்கப்படாமல் கட்டிடங்களும் கட்டமைப்பும் வீணாகிப் போனது.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி உட்பட அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையிலிருந்து காணொளி மூலம்  ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி குழுமங்களின் தாளாளர் சந்திரசேகரன், அதியமான்கல்வி குழுமங்களின் தாளாளர் திருமால் முருகன் கலந்து கொண்டனர். பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் காணொளி காட்சியில் முதல்வர் திறந்த ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.


பெண்கள் விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம், ஜூன்.17- சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும்,  இருத்தல் வேண்டும். 18 வயது மேற்பட்டவராகவும, குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக வரவேற்கப்படுகின்றன.  சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (hவவயீள://யறயசனள.வn.படிஎ.in) இணையதளவழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்திக்குறிப்பில் என தெரிவித்து உள்ளார்.


கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர், ஜூன் 17- கடலூரிலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் தி.சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் கடலூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியின் மூலம் படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வேளாண் இடுபொருள், உயிரியல் பூச்சி மற்றும் நோய் கொல்லிகள், உற்பத்தி குறித்த பட்டயப்படிப்பு படிப்பதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக் கலாம். இதில் 6 மாத காலம் மற்றும் ஓராண்டு படிப்பு உள்ளது. இதேபோல் நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் படிப்பு படிப்பதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஓராண்டு படிப்பாகும். இந்த பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அனைத்தும் தமிழ் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை 04142-220630 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஜூன் 29 அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம்

கடலூர், ஜூன் 17- கடலூர் கோட்ட அளவி லான அஞ்சல் துறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வருகிற 29 ஆம் தேதி  12 மணிக்கு கடலூர் வண்ணாரப்பாளையம் கடற்கரை சாலையிலுள்ள அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் கடலூர் அஞ்சல் கோட்டத்தி லுள்ள அஞ்சலக சேவை களில் வாடிக்கை யாளர்க ளின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். இந்த மன்றத்தின் விவாதத்துக் கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை, அஞ்சலகங்களின் கண்காணிப் பாளர், கடலூர் கோட்டம், கடலூர் 607001 என்ற முகவரிக்கு வரு கிற 28 ஆம் தேதிக்கு முன்பாக கிடைக்கும்படி எழுதி அனுப்ப வேண்டும் என்று கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு: மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்

சிதம்பரம், ஜூன் 17- அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின்  சிதம்பரம் நகர 19வது மாநாடு நகல தலைவர் அமுதா தலைமையில் நடைபெற்றது. மூத்தத் தலைவர் ஞானமணி கொடியேற்றி வைத்தார்.  சிபிஎம் நகர மன்ற உறுப்பினர் தஸ்லீமா வரவேற்றார். மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி  மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். நகரச் செயலாளர் மல்லிகா வேலை அறிக்கை சமர்பித்தார். பொருளாளர் கவிதா வரவுச்-செலவு கணக்குகளை வாசித்தார்.  நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், மாதர் சங்க முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசித்ரா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் தேன்மொழி நிறைவுரையாற்றினார்.   13 பேர் கொண்ட நகர்குழுவுக்கு தலைவராக அமுதா, செயலாளராக மல்லிகா, பொருளாளராக கவிதா  ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  சிதம்பரம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் உடனடியாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.