districts

நடராஜர் கோவிலில் பக்தரை தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு

சிதம்பரம், ஜூன். 24-

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த  பக்தர் கார்வண்ணன் (61) அவர், கோயில் 21 ஆம் படி அருகே தரிசனம் செய்து கொண்டி ருந்தபோது தீட்சிதர்கள் கனகசபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கீழே தள்ளி விட்டுள்ளார்.

     இதுகுறித்து கார்வண்ணன் சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர், தீட்சிதர்கள் இருவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், கனக சபையில் வழிபட தடை விதித்து தீட்சிதர்கள் பேனர் வைத்துள்ளனர்.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார், இந்து சமய அறநிலைய துறையின் செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்டவர்கள் தலையீட்டு, அந்த பேனரை அகற்றுமாறு தீட்சிதர்களிடம்  அறிவுறுத்தினர். ஆனாலும், தீட்சதர்கள் பேனரை எடுக்க முடியாது என மறுத்து விட்டனர். அரசு உத்தரவை மீறி செயல்படும் தீட்சிதர்கள் மீது உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.