பொன்னேரி, ஏப். 11- மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2ஆவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 என மொத்தம் நாள் ஒன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பை அரசு கையகப்படுத்தி மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் ராட்சத குழாய் வழியாக மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் அருகே உள்ள இடங்களில் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் சாம்பல் கழிவு பல வருடங்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு உப்பங்கழி ஆறு, பக்கிங்காம் கால்வாய் முழுவதும் அடை பட்டு மழைநீர் கால்வாய் முழுவதும் தேங்கி கிடக்கிறது. அதேபோல் சாம்பல் கழிவுகளால் நிலத்தடி நீர், காற்று மாசுபாட்டினால் ஆற்றில் வாழும் மீன்கள் அழிந்துவரும் நிலையில் மாங்குரோவ் காடுகள் முழுவதும் அழிந்து காணப்படுகின்றன. மேலும் காற்றில் பறக்கும் சாம்பல் கழிவுகளால் பொதுமக்க ளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார் கள். எண்ணூர் உப்பங்கழி உள்ளிட்ட பகுதிக ளில் சுமார் 5.7 மெட்ரிக் டன் சாம்பல் கழிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டன. இதையடுத்து இந்த பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அவர்கள் சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். 1996ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையே 905 ஹெக்டர் நில பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக பிரத்யேக செயற்கைகோள் புகைப்படம் மற்றும் முக்கிய தரவுகளின் படி அனல்மின் நிலைய கழிவு பறக்கும் சாம்பல் கழிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இது பற்றி 466 பக்க அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாய உயர்மட்ட குழு அறிக்கை யாக சமர்ப்பித்து உள்ளது. இதில் 905 ஹெக்டேரில் மட்டும் இயற்கை ஈர நிலங்களின் கீழ்பகுதி 68 விழுக்காடு குறைந் துள்ளது. எண்ணூர் சதுப்பு நிலங்கள் சாம்பலாக மாறிவிட்டன என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எண்ணூர் பகுதியில் மின் உற்பத்தி நிலையங்கள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகளால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்பட்டு இருப்பதாக வும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நீர்நிலை உப்பளம் 553.37 ஹெக்டேர் மற்றும் நீர்நிலைகள், 233.60 ஹெக்டேர் உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. பறக்கும் சாம்பல் கழிவுகள் இல்லை. ஆனால் 2022-ம் ஆண்டில் அதிகாரப்பூர்வ தகவலின்படி நீர்நிலை உப்பளம் 95.55 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் 148.69 ஹெக்டேராகச் சுருங்கி, சதுப்பு நிலத் தாவரங்களின் பரப்பளவு 1996 இல் 68.72 ஹெக்டேரில் இருந்து இப்போது 33.74 ஹெக்டேராக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சதுப்பு நிலங்களின் பரப்பளவு 1996 இல் 855.69 ஹெக்டேரில் இருந்து 2022-ல் 277.92 ஹெக்டேராக குறைந்திருக்கிறது. சாம்பலால் மூடப்பட்ட பரப்பளவு 260.28 ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.