திருவள்ளூர், ஜூன் 18-
மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி துறை முக விரிவாக்க திட்டத்துக்கு 2009 ஆம் ஆண்டு காட்டுப் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது.
அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நிலையில், பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்யா (33) என்பவர் உள்பட 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலை யில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதற்கிடையே பணி நித்யா (33) உள்பட 4 பேர் கடலில் மீன் பிடிக்க சனிக்கிழமை யன்று (ஜூன் 17) படகில் சென்றுள்ளனர். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மன வேதனையை நண்பர்க ளிடம் பகிர்ந்தார். பின்னர் திடீரென கடலில் மயங்கி விழுந்த அவரை சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் காட்டுப்பள்ளி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு, அதானி துறைமுக நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். நித்யா உடல் கிடைக்காததால் படகுகள் மூலம் தொடர்ந்து தேடி வருகின்றனர்.