districts

img

தொழில்வரியால் பாதிப்பு: வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

தொழில் வரி, உரிமக் கட்டணம், சமூக விரோதிகளால் வணிகர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் முன் அறிவிப்பின்றி நள்ளிரவில் கடைகளின் முகப்புகளை அப்புறப்படுத்துவதைக் கண்டித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சவுந்தர்ராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.டைமன் ராஜா வெள்ளையன், பொருளாளர் எஸ்.பீர் முகமது, மாவட்டத் தலைவர் செ.துரைமாணிக்கம், செயலாளர் ஆர்.பழனிச்செல்வன், பொருளாளர் டி.எஸ்.பி.விவேகானந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.