districts

வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை திருட்டு

வண்டலூர்,ஜூன் 22-  

    செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கோகுல ராமன் (வயது 32), இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கோகுல ராமன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.