புதுச்சேரி,ஜன.19- தென்பெண்ணை ஆற்று திருவிழாவில் பாரதி புத்தகால யத்தின் புத்தக விற்பனை இயக்கம் நடைபெற்றது. பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பாரதி புத்தகாலயம் மற்றும் பாகூர் காரல் மார்க்ஸ் நூலகம் சார்பில் 5வது ஆண்டாக நடைபெற்ற புத்தக விற்பனை இயக்கத்திற்கு காரல் மார்க்ஸ் நூலக பொறுப்பாளர்கள் கல்கி இரா.ஆனந்த ராமன், பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் நா.சண்மு கம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், விற்பனை இயக்கத்தை துவக்கி வைத்தார். பெண்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகமாக வாங்கி சென்றனர்.