மீஞ்சூர்,மே 12-
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி, இம்மானுவேல் மெட்ரி குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் கடந்த மே-1 அன்று கழிவுநீர் தொட்டி யில் உள்ள கழிவுகளை அகற்றும் போது விஷவாயுத் தாக்கி இருவர் உயிரிழந்த னர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தலா ரூ.6 இலட் சத்திற்கான காசோலை, தாட்கோ சார்பாக ரூ5 லட்சத்திற்கான காசோலையை உயிரி ழந்த இருவரின் வாரிசுதாரர் களுக்கும் தேசிய தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் ஆணையர் எம். வெங்கடே சன் வழங்கினர்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், செங்குன்றம் காவல் துணை ஆனணயர் நெ. மணி வண்ணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.