ஆலந்தூர், ஜூன் 15-
புதிய விமான முனையத் தின் முன் பகுதியில் பசுமை யான செடிகள், நடைபாதை கள் அமைக்கும் பணி, செல்பி மையம், உணவ கங்கள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது.
சென்னை விமான நிலை யத்தில் புதிய ஒருங்கி ணைந்த விமான முனை யம் உலகத்தரத்தில் நவீன முறையில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் கட்டப் பட்டுள்ளது. இப்போது இந்த புதிய முனையத்தில் சோதனை முறையில் விமா னங்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய ஒருங்கி ணைந்த விமான நிலை யத்தின் வெளிப்பகுதியில் கூடுதலாக இடங்கள் உள்ளன. இதனை மேலும் அழகுப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்பொழுது இயங்கி வரும் பழைய உள்நாட்டு முனையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் மூலமாக அந்த சேவைகள் நடை பெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பழைய சர்வதேச விமான முனையம் முற்றிலுமாக இடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரி கள் தெரிவித்தனர். அதே போல் இந்த புதிய ஒருங்கி ணைந்த முனையத்தை அழகுப்படுத்தும் பணி சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.