சென்னை, ஜன. 27 - பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ‘இந்தியா - மோடிக் கான கேள்விகள்’ எனும் ஆவணப்படத்தை பார்த்த வாலிபர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். பிபிசி-யின் ஆவ ணப்படத்தை ஒன்றிய பாஜக அரசு குறுக்கு வழியில் தடை செய்துள்ளது. இதனை கண்டித்தும், தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் இளைஞர்களும், மாண வர்களும் திரையிட்டு வரு கின்றனர். சங்பரிவார் கும்பல், காவல்துறை, அரசு நிர்வாகம் ஆகியவற்றின் தாக்குதலையும் முறியடித்து இந்த திரையிடலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெருக்கள்தோறும் ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், கல்வி வளா கங்கள் தோறும் திரையிட இந்திய மாணவர் சங்கமும் அறைகூவல் விடுத்துள்ளன. பல்வேறு சமூக குழுக் கள் வாட்ஸ்ஆப், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங்கள் வாயி லாகவும் படத்தை அனுப்பி வருகின்றன. தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப் படத்தின் பெயர்களில், ஆவ ணப்படத்தை இணைய தளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றி வருகின்றனர். இதனால் பாஜகவினர் திக்கித் திணறி வரு கின்றனர். இந்நிலையில், வாலிபர் சங்கத்தினர் வியாழனன்று (ஜன.26) அண்ணாநகர் தா.பி.சத்திரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து, ஒன்றிய அரசின் கருத்துரிமை பறிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். அதன்பின்னர் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையில் சாலையோரம் அமர்ந்து செல்போனில் ஆவண படத்தை பார்த்தனர். இதில் சென்னை மாநகராட்சி 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் தா.பி.சத்திரம் காவல்துறையினர் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் விக்டோரியா மாணவர்கள் விடுதி மைதானத்தில், ஆவணப் படத்தை திரையிட்டனர். மேலும், கல்வி நிலை யங்கள் தோறும் படத்தை திரையிடவும் திட்ட மிட்டுள்ளனர்.