அம்பத்தூர், ஜன. 5- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சியில் அயப்பாக்கம், பவானி நகர், கணேஷ் நகர், அய்யப்பா நகர், சீனிவாசா நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, எழில் நகர் ஆகியவை உள்ளன. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அய்யப்பா நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் எப்போது மழை பெய்தாலும் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் நிலை உள்ளது. மேலும் மழை நீருடன் கழிவு நீரும், குப்பைக் கழிவுகளும் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகும் மையமாக உள்ளது. அதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப் புகளிலும் மழைநீருடன் கழிவுநீர், குப்பைக் கழிவு கள் தேங்கி உள்ளன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் உள்ள தண்ணீரில் கால் வைத்தால் அரிப்பு ஏற்படுவதுடன் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் நிலத்தடி நீர் பாழடைந்து குடிப்பதற்கு உபயோகமற்றதாக மாறி விட்டது. அயப்பாக்கம் ஊராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியோடு அல்லது ஆவடி மாநகராட்சியோடு இணைத்து, இந்த ஊராட் சிக்கு என சிறப்பு நிதி ஒதுக்கி, முறையான பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வாய், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.