காஞ்சிபுரம், மே16 - காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை விபத்து ஏற்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டு நர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதி களை மீறி வாகன ஓட்டிகள் செயல்படுவதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு பல்வேறு நிலை களில் உயிரிழப்பு ஏற்படு கிறது. இதனை தவிர்க்க போக் குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் பல்வேறு வகைகளில் ஏற்படுத்தப் பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் , ஏஎஸ்பி (பயிற்சி) ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு வகுப்பினை மேற் கொண்டார். இதன் மூலம் வாகன விபத்துக்கள் குறைந்து விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்துவோம் என உறுதிமொழியும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் போக்கு வரத்து கழக பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி , காஞ்சிபுரம் நகர போக்கு வரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்று நர்கள் என பலர் கலந்து கொண்டனர்.