districts

சாம்பார் சாதம் சாப்பிட்ட சிறுமி பலி

ஆரணி, ஜூலை 2-  

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னாங் காரனை கிராமத்தை சேர்ந்த வர் பிரபாகரன். தனியார் நிறு வனத்தில் ஓட்டுநர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களது மகள் பிரிய தர்ஷினி (வயது 8), மகன் தக்ஷி (5). பிரியதர்ஷினி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வெள்ளி யன்று இரவு அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கி னர். நள்ளி ரவில் பிரிய தர்ஷினிக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது. இதை யடுத்து பிரியதர்ஷினியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரிய தர்ஷினி உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை ஆனதால் உயி ரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

;