வேலூர், மே 16-
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பகுதி யில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு 250 குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டு களாக வசிக்கின்றனர். ஆனால் இவர்க ளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவில்லை.
இதனால் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடத்தில் இருந்து குடிநீரை பிடித்து வந்து பயன்படுத்தி வரு கின்றனர். குடிநீர் வசதி கேட்டு பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சம்பந்தப்பட்ட அதி காரிகள் தெரிவிப்பதாகவும், பின்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் குடிநீர் வசதி கேட்டு குடியிருப்பு வாசிகள் மொட்டை மாடியில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி விட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.