திருவண்ணாமலை, மலப்பாம்பாடி பகுதியில் இயங்கி வந்த அருணாச்சலா சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள ரூ.11 கோடியை பெற்றுத்தரக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே. வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் ரஜினி ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.