districts

img

கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 510 வீடுகள்

கள்ளக்குறிச்சி, நவ.19 - ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 510 வீடுகள் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகை யில், கலைஞரின் கனவு இத்திட்டத்தின் கீழ் குடிசைகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு புதிதாக சிமெண்ட் வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் பெறப்பட்டுள்ளது. அதன்படி ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 60 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 49 ஊராட்சிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 510 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், ஜெகநாதன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.