சிதம்பரம், ஏப். 20- சிதம்பரம் பேருந்து நிலையம் வாயில் அருகே 3 டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இதனால் பேருந்து நிலையம் வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் குடி பிரியர்க ளின் கடுமையான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையுறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாஸ்மாக் கடை களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப் 21) பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை (ஏப் 20) சிதம்பரம் வட்டாட்சியர் செல்வ குமார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தங்கதுரை, கோட்ட கலால் அலுவலர் ஹேமா ஆனந்தி, நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக் குமரன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஒரே நேரத்தில் 3 கடைக ளையும் மாற்று இடத்தில் மாற்றுவதில் சிரமம் உள்ளது என்றும், வரும் ஜூன் மாதத்திற்குள் 2 கடைகளை அந்த இடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்று வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்