வேலூர். மார்ச் 13 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் பாவலரேறு பெருஞ்சித்திர னார் 92-வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் விருது பெற்ற தமிழ் அறிஞர்க ளுக்கு புதனன்று பாராட்டு விழா நடை பெற்றது. தமிழியக்க மாநில செயலாளர் சுகுமார் வரவேற்று பேசினார். பொருளாளர் பதுமனார் வாழ்த்துரை வழங்கினார். தமிழக மக்கள் முன்னணி ஒருங்கி ணைப்பாளரும், பெருஞ்சித்திரனாரின் மகனுமான பொழிலன், தமிழியக்கம் கல்வி யாளர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கி விருது பெற்ற அறிஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.