districts

img

செங்கல்பட்டில் பாலியல் வன்முறை எதிர்ப்பு மாநாடு

செங்கல்பட்டு, டிச. 12- கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவர், வாலிபர், மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் பாலியல் வன்முறை எதிர்ப்பு மாநாடு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் சனிக்கிழமை (டிச. 11) நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கல்வி நிலையங்களில் ஆசிரியர் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்புகள் நடத்திட வேண்டும், பள்ளி பாட புத்தகங்களில் பாலியல் கல்வியை பாடதிட்டத்தில் இணைக்க வேண்டும், இணைய தளங்களில் நடைபெறும் குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்கள்-பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை 6 மாதத்திற்குள் விசாரித்து தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைப்பதை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,  ஆண், பெண் சமத்துவத்தை சமூகத்தில் நிலைநிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மபா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், பொருளாளர் இரா.சதீஸ், துணைச் செயலாளர் மு.பிரியங்கா,  மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி, மாவட்டத் தலைவர் க.ஆனந்தராஜ், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசி, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ஜெயந்தி, சட்டக்கல்லூரி மாணவி சேஸ்டியா ஆகியோர் பேசினர்.

;