சென்னை, ஏப். 11 - சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் தாம்பரம் பகுதி ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஏப்.10) நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி தலைவர் பி.வசந்தா தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.அப்பனு, வீட்டுவேலை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விஜயா, முறைசாரா சங்கத்தின் பகுதிச் செயலாளர் யு.அனில் குமார் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் பகுதி தலைவராக டி.சுசீலா, செயலாளராக ஜெ.வேல்பிரகாஷ், பொருளாளராக மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.