சிதம்பரம், அக் 17- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக் கிழமை (அக்.17) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர். என்.ரவி பங்கேற்று 3,6382 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக துணை வேந்தர் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான கோவி.செழியன், புதுதில்லி இந்திய அரசு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் முதன்மை ஆலோசகர் மற்றும் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்ட மளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மலையரசன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம். பதிவாளர் எம்.பிரகாஷ் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி, பதிவாளர் மு.பிர காஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ்.குமார், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் சீனிவாசன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி நகர்மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணாமலை பல்கலைக் கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன், சபா. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.