வேலூர், மே 26-
வேலூர் மாவட்டம், திரு வலம் அருகே உள்ள குகைய நல்லூரை சேர்ந்தவர் சரத்குமார். இவரை மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் சாதி ரீதியாக திட்டியதுடன் தாக்கி யும் உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரத்குமார், கடந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை யில் இருந்தபோது 12.4.22 அன்று வேலூர் மாவட்ட நீதிபதி யிடம் அளித்த மரண வாக்கு மூலத்தில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் சாதியை சொல்லி இழிவுபடுத்தி அடித்து துன்புறுத்தியதால் தற்கொலைக்கு தூண்டப்பட் டேன் என்று கூறிய நிலையில் 17.4.2022 அன்று உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து, வன்கொடுமை சட்டத்தின் பிரிவு 3 (1) ஆர்.எஸ். ஐ நீக்கி பிரிவு மாற்றம் செய்தனர். இதை எதிர்த்து சரத்குமாரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், 3 (1)ஆர்.எஸ். இணைக்க வேண்டும் என்றும் வழக்கை சிபி சிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி 3 (1)ஆர்.எஸ். பிரிவை இணைத்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவமனையில் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப் படையில் காவல் உதவி ஆய்வாளர் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட உதவி ஆய்வாளர் கார்த்திக்கை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் காட்பாடி காவல் துணை கண்காணிப் பாளர் பழனி, நீதிபதி முன்பு பெற்ற மரண வாக்குமூலத்தை மதிக்காமல், எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறுதலாக இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து வரு கிறார்.
இதுகுறித்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவரிடம் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் அடிப் டையில் காவல் துணை கண்காணிப்பாளர் பழனியை விசாரிப்பதற்கு அவரையே விசாரணை அதிகாரியாக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் திருப்பத்தூர் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
சரத்குமார் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வா ளரை பாதுகாக்கும்நோக்கில் செயல்படும் காட்பாடி காவல்துறை கண்காணிப்பா ளரின் செயல் கண்டனத்திற்குரி யது. அவர் மீது புகார் அளி த்தால் அவரையே விசாரணை அதிகாரியாக நியமிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இது பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் மீண்டும் அநீதியை இழைக்கும் செயலாகும். எனவே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறை இயக்குநரும் இப்பிரச்சி னையில் உடனடியாக தலை யிட்டு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நீதியும், நிவாரணமும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். காவல்துறையின் இச் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அம்பேத்கர் - பெரியாரிய இயக்கங்கள் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு எஸ். தயாநிதி தெரிவித்திருக்கிறார்.