districts

img

சுரங்கங்கள் அமைத்து பாலைவனமாக்குவதா?

கடலூர், ஏப். 29- சுரங்கங்கள் அமைத்து கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே தலைவர் பி.வெங்கடேசன் தலை மையில் சனிக்கிழமை (ஏப். 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தை பாலைவன மாக்கும் நெய்வேலி சுரங்க விரிவாக்கம், வீராணம் சுரங்க திட்டம், ஸ்ரீமுஷ்ணம் சுரங்கத் திட்டம், மற்றும் பாளையங்கோட்டை சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து, சுற்றுச்சூழலை பாது காக்க வேண்டும். தொழில்துறை அமைச்சர் அறிவித்துள்ள ஒன்றிய அரசின் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைய வுள்ள பெட்ரோல் ரசாயன மண்டலம், மற்றும் உலக நாடுகளால் துரத்தி அடிக்கப்பட்ட அபாயகரமான ரசாயன தொழிற்சாலைகளை அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும். கடலூரின் நீர் ஆதாரமாக விளங்கும் கொண்டங்கி ஏரி மற்றும் மேல் ஏரியை பாதுகாத்து கெடிலம் ஆற்றில் இருந்து திருவந்திபுரம் வழியாக ஏரியின் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி முழு கொள்ளளவில் ஏரியில் தண்ணீர் தேக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். எம்.புதூரில் புதிய பேருந்து நிலையம் என்ற மாநகராட்சி கொள்கை முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. இதில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், பொரு ளாளர் கே.பி.சுகுமாரன், உதவி பொதுச் செயலாளர் தேவநாதன், நிர்வாகிகள் டி.புருஷோத்தமன், கிருஷ்ணமூர்த்தி, மாய வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநில சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, சிபிஎம் மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் பேசினர்.