சென்னை, நவ. 18 - மனைவியின் ஆடை யில்லா புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய விவரம் வருமாறு: பல்லாவரம் குளத்து மேடு பகுதியை சேர்ந்தவர் அ.பிரதிலலிதாவும் (வயது 20), பூந்தமல்லி வெள்ளவேடு பகுதியை சார்ந்த சரண் (எ) சர வணனும் காதலித்து கடந்த மே 13ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவரும் திருநின்றவூரில் வசித்து வந்தனர். ஓரிரு மாதங்களில் சரவணனுக்கு வேறுஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பிரதில லிதாவுக்கு தெரியவந்து கேட்டுள்ளார். இதனால் பிரதில லிதாவை சரவணன் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி, மனோரீதியாக சித்ரவதை செய்து வந்துள்ளார். ஜூலை 29 அன்று அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடச்சென்ற பிரதிலலிதாவை, அங்கு சென்றும் சரவணன் தாக்கியுள்ளார். இதனால் கேனில் இருந்த பெட்ரோலை மேலே ஊற்றி பிரதிலலிதா தீ வைத்துக்கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்பாக்கம் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த லலிதாவின் காலை பிடித்துக் கொண்டு, தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என்று கூறும்படி சரவணன் அழுதுள்ளார். இதனால் வாக்குமூலம் பெற்ற நீதிபதியிடம், தற்கொலை முயற்சிக்கு சரவணன் காரணம் இல்லை என்று கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது தாய் வீட்டிற்கு திரும்பிய பிரதிலலிதாவை தொடர்பு கொண்டு, விவாகரத்து கேட்டு மிரட்டிய சரவணன், ஆடை இல்லாத புகைப் படங்களை சமூக வலை தளத்தில் வெளியிடுவேன். குடும்பத்தையே கொன்று விடுவேன் என்று மிரட்டி யுள்ளார். இது தொடர்பாக நவ.12ந் தேதி சங்கர் நகர் காவல்நிலையத்தில் பிரதிலலிதா புகார் கொடுத்துள்ளார். அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனி டையே நவ.17ந் தேதி லலிதாவின் ஆடையில்லாத புகைப்படங்களை சரவணன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். காவல்துறையினர் மெத்தனத்தை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திங்களன்று (நவ.18) சங்கர் நகர் மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தர்ணா நடத்தினர். இதில் பிரதி லலிதா அவரது தாயார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். சரவணசெல்வி, செய லாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோ ரிடம் உதவி ஆணையர் வெங்கட்குமார், ஆய்வாளர் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்குபதிவு செய்து நவ.19ந் தேதிக்குள் குற்றவாளியை கைது செய்வதாக உறுதி யளித்தனர்.