சென்னை,நவ.22- தமிழக முதலமைச்சரின் தொகுதி யான கொளத்தூரில் இந்துசமய அற நிலையத் துறையால் நடத்தப்படும் அருள்மிகு கபாலீசுவரர் கலை அறி வியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரிக்கு நிரந்தர இடம் கட்டும் வரை எவர்வின் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் தற்போது முதல்வர் பொறுப்பில் உள்ளவர் முனைவர் சி.லலிதா. இவர் கல்லூரியில் முதல்வ ராகப் பணியில் சேர்ந்ததிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பேராசிரியர்கள் ஊழியர்கள் என அனை வரையும் பெரும் மன உளச்சலுக்கு ஆளாக்கி வருவதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. கல்லூரி வளர்ச்சிக்காக எந்த பணி யையும் மேற்கொள்ளாமல் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பேரா சிரியர்களுக்குள்ளேயே மோதலை தூண்டுவது, தனது அச்சுறுத்தலுக்கு அடிபணியாத பேராசிரியர்களைப் பற்றி மாணவர்களிடம் தவறாக எழுதச் சொல்லி கடிதம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர்கள் கூறினர். சாதி ரீதியிலான பிரிவினை பாகுப் பாட்டுடன் பேராசிரியர்களை வழி நடத்துகிறார். பேராசிரியர்களை பாடம் நடத்தவிடாமல் சிசிடிவி கேமாராவை மட்டும் பார்த்துக்கொண்டு தவறாகப் பேசி வருகிறார். மாணவிகள் படிக்கும் கல்லூரியில் பாதுகாப்பு கருதி வராண்டா அல்லது நுழை வாயில் பகுதியில்தான் கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்லூரியில் வகுப்பறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவிகள் யாரும் இல்லாத நேரத்தில் உடை சரி செய்து கொள்ளும் போக்கு உள்ளது. அது கேமராவில் பதிவாகும் என்பதால் இதற்கு மாண விகள் பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். மேலும் பேராசிரி யர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்து வதை காசாளர் பொறுப்பில் வேலை செய்யும் பார்த்தீபன் என்பவரிடம் வீடியோ எடுக்கச் சொல்லி பேராசிரியர்களை முதல்வர் லலிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். மேலும் லலிதாவும் பார்த் தீபனும் பேராசிரியர்கள் பேசும்போது அவர்களது கைப்பேசியில் குரலினைப் பதிவு செய்து அவற்றினை எடிட் செய்து அமைச்சர் சேகர்பாபுவிடம் போட்டுக்காட்டி அவருக்குப் பிடிக்கா தவர்கள் பற்றி தவறாக கூறி வரு வதாக பேராசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கல்லூரியில் என்ன நடக்கிறது என்கிற தகவலை நிமிடத்திற்கு நிமிடம் கல்லூரி முதல்வரிடம் பேராசிரியர் களைப் பற்றி தவறாக ஒப்பித்தல், மாண வர்கள் கல்விக்கட்டணம் செலுத்த வந்தால் அவர்களை உதாசீனப்படுத் தும் காசாளர் பார்த்தீபன் முதல்வரின் கூட்டாளியாக செயல்படுகிறார். காசாளர் பார்த்தீபன் பேராசிரி யர்களை ஒருமையில் பேசுவதை வாடி க்கையாக வைத்திருக்கிறார். துறை அமைச்சர் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனைவரையும் மிரட்டு வதாகவும் அவர்கள் கூறினார். தமிழ் நாடு அரசின் முதல்வர் தொகுதியில் உள்ள கல்லூரி என்பதால் மாண வர்களின் வருகை கடந்த மூன்றாண்டு களில் அதிகரித்தது. தனது பேச்சை கேட்காதவர்களை வேலையிலிருந்து தூக்கி விடுவேன் என கல்லூரி முதல்வர் பேராசிரியர்களை மிரட்டு கிறார். அதனால் கல்லூரி பேராசிரியர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரிடம் பேசுவதற்கு தயங்கு கின்றனர். மாணவர்களுக்கு கரும் பலகையில் எழுதி விளக்கக் கூடாது என்று பேராசிரியர்களை எச்சரிக்கி றார். ஏற்கெனவே முதல்வர் நேர்காண லின் போது தகுதியுள்ள பலர் புறக்க ணிக்கப்பட்டு சிபாரிசு அடிப்டையில் இவர் தேர்வு செய்யப்பட்டதாக ஊழி யர்கள் தெரிவித்தனர். நிர்வாக அனு பவம் இல்லாத முதல்வர் சி.லலிதா நடவடிக்கையால் கல்லூரி தன் மதிப்பை இழந்து வருகிறது. இதனால் முதலமைச்சர் தொகுதியில் உள்ள மாணவர்கள் மட்டுமல்ல பேராசிரி யர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அரசு க்கும் முதலமைச்சருக்கும் அறநிலை த்துறை அமைச்சருக்கும் இவர் அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வளாக நேர்காணல் என்ற பெயரில் கால் சென்டர் நிறுவ னங்களின் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் 5ஆயிரம் ரூபாய்க்கு வேலை கொடுத்துவிட்டு மாணவர்களை கசக்கி பிழிவதால் பலர் வேலையை விட்டு வெளியேறி விட்டனர். கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள் இந்த மாணவர்களை மிரட்டி கடன் வசூ லிக்க இலக்கு நிர்ணயிக்கின்றன. இதை போன்ற வேலைகளால் பல மாண வர்கள் வேதனையடைந்து வேலையை விட்டுவிட்டனர். ஆனால் முதல்வரிடம் தாம் பெரிய நிறுவனங்களில் மாண வர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறிக்கொள் கிறார். சில மாதங்களுக்கு முன்பு லலிதா தலைமையின் கீழ் கல்லூரி நிர்வா கம் சரியில்லை என்று சில கோரிக்கை கள் அடங்கிய மனுவை 17 பேராசிரி யர்கள் கையொப்பமிட்டு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணைய ரிடம் கொடுத்தும் அவர் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. கூடுதல் ஆணையரும் கண்டுகொள்ளவில்லை என்பதனால் வேறு எவரிடம் சொல்வது என்று தெரியாமல் பேராசிரியர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். பேராசிரியர்கள் பணிபுரிவதற்கான நல்ல சூழல் இருந்தால்தான் மாண வர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். கல்லூரி தொடங்கும்போது உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப் பட்ட 11 பேரில் ஒரு சிலர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். பலர் கல்லூரி முதல்வரின் தொல்லை தாங்க முடியாமல் பிற கல்லூரிகளுக்கும் பிற வேலைகளுக்கும் சென்றுவிட்டனர். எந்த வகையிலும் பயன்படாத முதல்வரை மாற்றவேண்டும் என்றும் ஜனநாயகபூர்வாக நடந்துகொள்ளும் நேர்மையான தகுதி வாய்ந்த நபரை கல்லூரிக்கு முதல்வராக நியமிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைகளில் மாநில முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மாணவர்களும் பேராசிரியர்களும் விரும்புகின்றனர். கல்லூரியில் நிலவும் பிரச்சனை கள் குறித்து முதல்வர் லலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனைகள் குறித்து கேட்டபோது அவர் ஊடகத்திற்கு தகவல் கொடுத்த மாணவர்கள் யார் என்ற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டார். ஆனால் நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் தொடர்பை துண்டித்து விட்டார். (ந.நி)