districts

வடசென்னையில் தமுஎகச கிளை உதயம்

சென்னை, ஆக. 21-

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் வடசென்னை மாணவர் கிளை துவக்க நிகழ்ச்சி  கவிஞர் அமீபா தலை மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 18 மாணவர் கள் தாங்கள் படித்து வந்த  புத்தகம் குறித்து பேசினர்.  ‘ஆதனின் பொம்மை’ நாவலைப் பற்றி பேசிய  மாணவி தான் தயாரித்து  வந்த கலை பொருட்க ளையும், நாவலின் சூழலுக்கு ஏற்ப தான் வரைந்து வந்த ஓவியங்களையும் காட்டி பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

     எழுத்தாளர் இ.பா.சிந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயலாளர் மணிநாத் அமைப்பின் நோக்கம் குறித்து பேசினார். இதில் உமாநந்தன், பிரபாகரன் அமீபா, தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தலைவராக பிரியசகி, செயலாளராக சுதந்திர தேவன், பொருளாளராக ஆரோக்கியசாமி, ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.