districts

img

அகில இந்திய கூட்டுறவு வார விழா

வேலூர், நவ.20- 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா திங்களன்று (நவ.20) காட்பாடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை வரவேற்றார்.  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2547 பயனாளிகளுக்கு ரூ. 17.42 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கியும், சிறந்த சங்கங்களுக்கு கேடயம், பரிசுகளை வழங்கியும் பேசினர். மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் கூட்டுறவு விழாவிற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.