districts

img

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், 1.1.2017 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், 1.1.2017 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநிலம் சார்பில் எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா, எப்.என்.டி.ஓ. அகில இந்திய தலைவர் லிங்கமூர்த்தி, டெபு பொதுச்செயலாளர் ஜெ.விஜயகுமார், சென்னை தொலைபேசி சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் என்.ஸ்ரீதர் சுப்பிரமணியம், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ராஜூ, என்.எப்.டி.இ. மாநில மாநில பொருளாளர் சி.ரவி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆளுநரை சந்திக்க மே 30ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பியும் இன்று வரை நேரம் ஒதுக்கவில்லை என்று நிர்வாகிகள் கூறினர்.