திருவள்ளூர், ஜூலை 2-
திருவள்ளூர் டோல் கேட், ஆய்வேலி அகரம் உள்ளிட்ட பகுதியில் திருவள்ளூர் டவுன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த 45 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் யார்? எதற்காக இங்கே நிறுத்தப் பட்டது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.