செங்கல்பட்டு, ஜூலை 3-
வெண்பாக்கத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைய வுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ. 40 கோடியில் கட்டவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தைகுறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னைப் பெருநகர்வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் திங்களன்று (ஜூலை 3) பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே இருக்கின்ற பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, புதிதாக பேருந்து நிலையம் வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்று,ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்து டன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இப்பேருந்து நிலையம் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகை யில்அமைக்கப்பட இருக்கின்றன. 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் 30 கடைகளும்அமையவுள்ளது.
மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட் டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொது மக்களுக்குகூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.