கிருஷ்ணகிரி,ஜூலை.8-
மகராஜாகடை சாலை நார்லப்பள்ளி கூட்ரோடு அருகில் இரவில் வந்த லாரியை நிறுத்தி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பரிசோதித்தனர்.
அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கியதும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். மினி லாரியில் 50 கிலோ அளவிலான 80 மூட்டைகளில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூட்டைகள் மேல் புறத்தில் அதிகாரிகளுக்கு தெரியாதிருக்க தேங்காய் மட்டைகளை அடுக்கி மறைத்து வைத்திருந்தனர்.இதையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் லாரியையும் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.