districts

img

3,500 ஏக்கர் உப்பளத்தை சூழ்ந்த மழை நீர்

விழுப்புரம், அக். 8- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலநிலை நிலவுவதை ஒட்டி ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.  இந்த மழை விழுப்புரம் பெரும்பாக்கம் காணை, மாம்பழப்பட்டு, அய்யூர், அகரம், சிந்தாமணி, முண்டி யம்பாக்கம், இருவேல்பட்டு, அரசூர், சாலையாகரம், இணங்காடு, செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை  பெய்த வண்ணம் உள்ளது. அதேபோல் மரக்கா ணம் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், ஒன்றிய, மாநில அரசுக்கு  சொந்தமான உப்பள பகுதி களில் சுமார் 3,500 ஏக்கரில்  நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழை யினால் 2 மாதங்களாக உப்பல பகுதிகளில் உப்பு  உற்பத்தி நடைபெற வில்லை. இதனால் 5,000க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந் துள்ளனர்.