விழுப்புரம், அக்.11- பதினோரு ஆண்டுகால மாக தலைமைமறைவாக இருந்து வந்த கொலைக் குற்றவாளியை காவல்துறை யினர் கைது செய்தனர். செஞ்சி அருகே அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (42 ). இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொலை குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தார். 18.5.2011 முதல் 22.5. 2011 வரை 5 நாள் பரோலில் வந்தவர் அதிலிருந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவுபடி செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.