போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெறும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிறுவனர் சகிலன், ஆசிரியர் தினேஷ் மற்றும் தொலைக்காட்சியின் முன்னணி ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநில துணை தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், தென் சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, வடசென்னை மாவட்ட தலைவர் ஜி.நித்தியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.