மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்- ஜெயலட்சுமி இல்ல திருமணவிழாவை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடத்தி வைத்து, மணமக்கள் கரு.லீலாவதி, சங்கர்லால் ஆகியோரை வாழ்த்தினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர்,பொன்னுத்தாய், மாவட்ட செயலாளர் தண்டியப்பன் வாழ்த்தி பேசினார்கள். தாலுகா செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். திருமண விழாவில் புரட்சியாளர் சேகுவேரா அவர்களின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார். ஏராளமான மக்கள் பார்த்தார்கள்.