districts

img

சுயதொழில் தொடங்க வங்கிகள் நிபந்தனையில்லாமல் கடன் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

உடுமலை ஜூலை 18- அனைத்துவகை மாற்றுத்திறனாளிக ளுக்குச் சுயதொழில் வணிககடன் வழங்க வங்கிகள் எவ்வித நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம்  வலியுறுத்தி உள்ளது திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான  சங்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு  டி.  லட்சுமணன் நினைவரங்கத்தில் ( தேஜஸ் மஹால்) 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் டி. ஜெயபால் தலை மையில் நடைபெற்ற மாநாட்டில், கொடியை மாவட்ட துணைத்தலைவர் எஸ்.குருசாமி ஏற்றி வைத்தார். அனைவரையும் வர வேற்புக்குழு தலைவர் தண்டபாணி வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைச் செயலாளர் எ. மாலினி முன் மொழிந்தார். மாநாட்டைத் துவக்கிவைத்து சிறப்புரையாக மாநிலச் செயலாளர்  டி. வில் சன் பேசினார்.

பின்னர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூ தணன், சிஐடியு மாவட்டத்துணை செயலாளர்  எஸ். ஜெதீசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். வேலைகளை  முன் வைத்து மாவட்டச் செயலாளர் பா.  ராஜேஷ் பேசினார். வரவு – செலவுகள் தொடர் பான அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஆர்.காளியப்பன் பேசினார். மாவட்ட துணை  செயலாளர் ஆர்.பழனிச்சாமி தீர்மானங் களை முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிக ளுக்குச் சிறு, குறு தொழில்கள் தொடங்க  வணிககடன் வழங்க எவ்வித நிபந்தனைக ளையும் வங்கிகள் விதிக்காமல் கடன் வழங்க வேண்டும். சமூக நலத்துறை மூலம் வழங்கப் படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும் கடும் ஊனமுற்றோர்களுக்கு மாற் றுத்திறனாளித்துறை மூலம் உதவித்தொகை  ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும். ஒன்றிய –  மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலை வாய்ப் பில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க மறுக்கும் நடவடிக்கையைக்  கைவிட வேண்டும். ஊராக வேலைத்திட்ட மான நூறு நாள் வேலையில் பாரபட்ச மில்லாமல் வேலை வழங்கவேண்டும். அனைவருக்கும் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும்.அரசு மருத்துவமனை மருத்துவர் களிடம் மாற்றுத்திறனாளிகள் என்று மருத் துவ சான்றிதழ் பெறச் சட்ட விதிகளை எளிமை யாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட தலைவராக டி.ஜெய பால், மாவட்ட செயலாளராக பா. ராஜேஷ், மாவட்ட பொருளாளராக எ.மாலினி  துணைத் தலைவர்களாக குருசாமி, சந்தி ரன், ரோஸி மற்றும் இணை செயலாளர்க ளாக பழனிசாமி, சஞ்சிவ், லோகநாதன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாக மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் பேசினார்.