திருப்பூர், ஜூலை 24- திருப்பூர் மாநகரில் அறி விக்கப்படாத மின்வெட் டைப் போக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகர மாநாடு வலி யுறுத்தி உள்ளது. வாலிபர் சங்கத்தின் தெற்கு மாநகர மாநாடு மாநகரத் தலைவர் நா.சஞ்சீவ் தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் சு.அருள் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் த.ஜெயபால் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான உபகரணங்களை முழுமை யாக நிறுவி உரிய சிகிச்சை அளிக்க வேண் டும். திருப்பூர் மாநகரில் கழிவுநீர் வடிகால் களை முழுமையாக தினமும் தூய்மைப்படுத் தவும், தெரு விளக்குகளை சரி செய்யவும், டெங்கு கொசு பரவாமல் இருக்க உரிய நடவ டிக்கை எடுக்கவும், மின்வெட்டைப் போக்க வும், வெள்ளியங்காடு பகுதியில் அரசுப் பேருந்தை இயக்கவும் வலியுறுத்தி தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகர மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநகரத் தலைவராக எஸ்.சரவணன், செயலாளராக த.நவீன் லட்சுமணன், பொருளாளராக ம.ஜீவா, துணைச்செயலாளராக ப.வாசு, அ. செல்லமுத்து, துணைத் தலைவர்களாக செ. தினேஷ்குமார், து.ராஜா மற்றும் 15 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாவட்டப் பொருளாளர் இரா.ஓம்பிரகாஷ் பேசினார். நிறைவாக துணைச் செயலாளர் அ.செல்லமுத்து நன்றி கூறினார்.