சேலம், ஆக.30- சேலத்தில் பள்ளி மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட விவகாரத்தில், 10 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள னர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், கம்மாளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த ஆக.25 ஆம் தேதி யன்று, 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கள் இருவர், உணவு இடைவேளை முடிந்து விளையாடிக் கொண்டிருந்த னர். அப்போது அதேபள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, 6 ஆம் வகுப்பு மாணவர்களி டம் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள், வகுப்பு அறையில் இருந்த ஆணியில் ஒரு மாணவரையும், கதவில் ஒரு மாணவ ரையும் சட்டையுடன் தூக்கி தொங்க விட்டுள்ளனர். இதில், ஒரு மாணவருக்கு கழுத்து இறுகியுள்ளது. இதன்பின் அந்த மாணவரை, சக மாணவர்கள் இறக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்கு தக வல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இதனிடையே ஆணி யில் தொங்கவிடப்பட்ட மாணவர் உடல் நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு மோகன் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இதுதொடர்பாக பனமரத்துப் பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசா ரணை மேற்கொண்டார். விசாரணை யில் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆணி யில் மாட்டி விடப்பட்டது உறுதியானதை யடுத்து, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரையும் 10 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு எழுதி வாங்கப்பட்டுள்ளது. “உணவு இடை வேளையில் நடைபெற்றதால் இதுகு றித்து தங்களுக்கு தெரியாமல் போய் விட்டது. இனிமேல் இதுபோன்று நடக் காது” என்று ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், 10 ஆம் வகுப்பு மாண வர்கள் இருவருக்கும் மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பாக அறிவுரை வழங்கப் பட்டது. மேலும், இதுபோன்ற செயல் கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அதி காரிகள் அறிவுறுத்தினர்.