திருப்பூர், மே 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழுக் கூட்டம் திங்களன்று அவி நாசிலிங்கம்பாளையத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தற்போது சொத்து வரி இனங்களுக்கு வரி கேட்பு நோட் டீஸ் வழங்கி வருகிறது. இந்த நோட்டீஸில் வரி இனங்களை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், செலுத்தாவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இல்லா விட்டால் கைப்பற்றாணை பிறப்பிக்கப்பட்டு, அதற்குண்டான கட்டணமும் வசூலிக்கப்ப டும், சொத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று மிகக் கடுமையான முறையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டு தொடங்கி ஒன்றரை மாதத்திற்கு உள்ளாக, வரி கேட்பு நோட் டீஸ் வழங்குவதும், அதில் சொத்தைப் பறிமு தல் செய்வோம் என்று மிரட்டுவதும் வன்மை யாக கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாநகரில் பின்னலாடைத் தொழில் நெருக்கடி காரணமாக பெரும் பான்மை மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நி லையில் நிதியாண்டு தொடக்கத்திலேயே மிரட்டி வரி வசூலிக்க முனைந்திருப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஏற்கெனவே சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது. எஸ்யூசி எனப்படும் திடக்கழிவு மேலாண்மைக் கட்டணமும் அபரிமிதமாக விதிக்கப்பட்டு, அதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அதற்கும் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. ஒருபுறம் வரிச்சுமை அதிகரித்தபோதிலும், சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமை அடையாமல் பற்றாக்குறை நிலை தொடர் கிறது. எனினும் பெரும்பான்மையான மக்கள் அந்நந்த நிதியாண்டு இறுதிக்குள் தங்க ளுக்கு உரிய வரிஇனங்களை மாநகராட் சிக்குச் செலுத்தி விடுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி மேயரே மாமன்றக் கூட் டத்தில் தெரிவித்தது போல, மிகப்பெரும் பின் னலாடை ஏற்றுமதி நிறுவனம், தனியார் மருத் துவமனை ஆகியவை தங்கள் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டி முறைகேடாக மிக, மிகக் குறைவாக வரி நிர்ணயிக்கச் செய்து மோசடி செய்துள்ளனர். இது போன்ற நிறுவனங்கள் திருப்பூர் மாநகராட்சிக்குப் பல கோடி ரூபாய் வரி நிலுவை வைத்திருக்கின் றன.
வரி ஏய்ப்பு செய்யும் பெரும் நிறுவனங்க ளிடம் உறுதியான முறையில் தலையிட்டு வரி வசூலிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், அதற்கு நடவடிக்கை எடுக்கத் துணிவு இல் லாமல், சாமானிய, நடுத்தர மக்களுக்கு சொத்தைப் பறிமுதல் செய்வோம் என மிரட்டி நோட்டீஸ் விடுவது நேர்மையற்ற நடவ டிக்கை ஆகும். எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போல் நோட்டீஸ் வழங்கியதைத் திரும்பப் பெற வேண்டும். சட்ட விதிமுறைப்படி செயல்பட வேண்டும். இத்தகைய மிரட்டல் நோட்டீஸ் விட்டதற்குக் காரணமான அதிகாரிகள் மீது மாநகராட்சி மேயர் விசாரணை நடத்தி உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.
பூண்டி நகராட்சி ஆணையருக்கு கண்டனம்:
திங்களன்று திருமுருகன்பூண்டி நகராட் சியில் திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் தீர்மா னத்தின் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து விவாதித்துக் கொண்டிருந்த நிலையில், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் தன்னிச்சையாக கூட்டம் முடிந்த தாக அறிவித்து வெளியேறியது கடும் கண்ட னத்துக்கு உரியது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக உரி மையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆணையரின் செயல் வெட்கக்கே டானது. உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர்களும், அந்த நகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்க ளும் அங்கேயே போராட்டம் நடத்தி, ஆணை யரை மீண்டும் நகர்மன்றக் கூட்டப் பதிவேட் டில் எதிர்ப்பை பதிவு செய்ய வைத்தது பாராட் டத்தக்கது. பூண்டி நகராட்சியில் தூய்மைப்பணியை தனியார்மயப்படுத்திய நடவடிக்கை நகரைத் தூய்மையாக வைத்திருக்க உதவாது. நக ராட்சி தூய்மைப் பணியாளர்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறிப்பதுடன், தனியார் ஒப்பந்ததாரர்களின் ஊழலுக்கும் வழிவகுக் கும். எனவே நகராட்சி தூய்மைப்பணி தனி யார்மய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.