districts

img

அரசு உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களை அலைகழிப்பதா?

தருமபுரி, பிப்.21- தருமபுரியில் அரசு நலத்திட்டங்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி களை அரசு அலுவலர்கள் அலைகழித்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலு வலகத்திற்கு அரசு நலத்திட்டங்களை பெற வும், விண்ணப்பிக்கவும் நாள்தோறும் மாற் றுத்திறனாளிகள் தங்களுடைய பாதுகாவ லருடன் வருகின்றனர். அப்போது, நலத் திட்டங்கள் பெற விண்ணப்பிக்கவும்,  விண் ணப்பங்கள் குறித்தும் விபரம் கேட்கும் போது மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் உள்ள ஊழியர்கள் முறையாக பதிலளிப்ப தில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ரமேஷ் என்பவர் கூறுகையில், எனக்கு காலில் பாதிப்பு உள்ளது. இதனால் நான் நடக்க முடியாத சூழலில், அரசின் இலவச ஸ்கூட் டர் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள் ளேன். இந்த மனு குறித்து  கேட்கும்போது ஊழியர்கள் முறையாக பதிலளிப்பதில்லை என வேதனையோடு தெரிவித்தார்.கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வெங்கடா ஜலம் என்பவர் கூறுகையில், நான் மாற்றுத் திறனாளிகளுக்கான அலைபேசி கேட்டு விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து அலுவல கத்தில் சொல்ல மறுக்கிறார்கள். அலுவல கத்திற்கு பலமுறை வந்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை, என்கிறார். இதேபோல், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாரியப்பன் என்பவர் கூறுகை யில், நான் பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பித் தேன்.

என் மனுவின் மீது எந்த நடவடிக்கை யும் இல்லை. நான் அலுவலகத்தில் கேட் டால் பதில் கூற மறுக்கிறார்கள் என தெரி விக்கிறார்.  மேலும், கால் பாதிப்படைந்த மாற் றத்திறனாளி மாது என்பவர் கூறுகையில், நான் சிறு வியபாரம் செய்ய மாற்றுத்திற னாளிகள் அலுவலத்தின் மூலம் ரூ. 1 லட்சம்  கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், வங்கியில் கடன் தரமறுக்கிறார் கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத் தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கிறார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான் கூறுகையில், தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் அரசின் நலத்திட்டங்கள் மற் றும் உதவிகள் கேட்டு பலர் விண்ணப்பித் துள்ளனர். ஆனால், இவ்வாறு விண்ணப் பித்து பல மாதங்களாகியும் விண்ணப்பத் தின் மீது உரிய நடவடிக்கை இல்லை. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் அலுவல கத்தில் விளக்கம் கேட்டால், விளக்கமும் தருவதில்லை, உதவிகளும் செய்வதில்லை. மாறாக, மாற்றுத்திறனாளிகளை அலட்சியப் படுத்துகின்றனர். மாற்றுத்திறனாளிகள் அலைகழிக்கப்படுவதால் மனஉளைச்ச லுக்கு அளாகியுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.