districts

img

முதல்வர் திறந்து வைப்பார் என சொல்லப்பட்ட மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

திருப்பூர், ஜன.11- திருப்பூர் 15.வேலம்பாளையம் பகு தியில் அனைத்து வசதிகளுடன் கூடிய  மருத்துவமனையை 2024 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் முதல் அமைச்சர்  திறந்து வைப்பார் என மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் தெரிவித்தார். ஆனால் 2025 ஆம்  ஆண்டு ஆகியும் இன்னும் மக்கள் பயன் பாட்டிற்கு வரவில்லை. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மக்கள் பயன் பெறும்  வகையில் 15.வேலம்பாளையத்தில் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி  நடைபெற்று வருகிறது. இப்பணி கடந்த  2022 ஆம் தொடங்கப்பட்டது. இதில், 86   படுக்கைகள், பொதுவார்டு, அறுவை   சிகிச்சை பிரிவு, ஆய்வகம், உள்நோயா ளிகள் தனிப்பிரிவு, விரிவுபடுத்தப்பட்ட ஸ்கேன்  வசதியுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில நகர்ப்புற சுகா தாரத் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டு றவு முகமை நிதி ரூ.27 கோடி மதிப்பீட் டில் பணிகள் தொடங்கப்பட்டன. 2023  டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவமனை  திறக்கப்படும் என பொதுப்பணித் துறை யினர் தெரிவித்திருந்தனர். ஆனால்  திறக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மருத்துவ மனையை ஆய்வு செய்த மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், ரூ.47.56 கோடி மதிப்பீட்டில்  86 படுக்கைகள் 100 படுக்கை வசதிகள்  கொண்ட மருத்துவமனையாக தரம்  உயர்த்தப்படும். 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில்  முழுப் பணிகளும் முடிக்கப்படும். 44 பேர் கொண்ட ஊழியர்கள் அமர்த்தப் பட இருக்கிறார்கள். தமிழ்நாடு முதல மைச்சர் திறந்து வைப்பார் எனத் தெரி வித்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு  நவம்பர்  மாதம் கட்டுமானப் பணிக்கு  நிர்ணயித்த  காலக்கெடு முடிந்து விட்டது. 2025 ஆம் ஆண்டு தொடங் கியும் இன்னும் திறக்கப்படாமல் உள் ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், பல்வேறு வெளி  மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிபு ரிந்து வருகிறார்கள். இப்பகுதியில் அவசர தேவைகளுக்கு இங்கு அரு காமையில் அரசு மருத்துவமனை இல்லாததால், தனியார் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியுள் ளது. இதனால் தொழிலாளர்க ளுக்குக் கூடுதல் சுமை ஏற்படுகி றது. இப்பகுதியில் அனைத்து வச திகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்கிற செய்தி இப் பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை  ஏற்படுத்தியது. ஆனால், 2022  ஆண்டு  கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட் டும், மருத்துவமனை இன்னும் செயல் பாட்ற்கு வரவில்லை. இதுறித்து இங்கு  பணிபுரிபவர்களிடம் கேட்டால், இன் னும் சில பணிகள் பாக்கியுள்ளது. தற் போது தற்காலிக மின்சாரம் கொடுக்கப் பட்டுள்ளது. நிரந்தர மின்சாரம் கிடைக்க  இன்னும் இரண்டு டிரான்ஸ் பார்மர்  அமைக்க வேண்டும் என்றனர். ஏதேனும்  விபத்து ஏற்பட்டால் இப்பகுதியிலி ருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அழைத்து செல்ல வேண்டியுள் ளது.  15 வேலம்பாளையத்தில் வடக்கு  பகுதிக்கான அரசு மருத்துவமனை  செயல்பாட்டுக்கு வந்தால், அவிநாசி  சாலையில் உள்ள பகுதி மக்கள் பெரும் பாலானோர் வேலம்பாளையம் அரு கில் உள்ளதால் இம்மருத்துவம னையை பயன்படுத்துவார்கள். மேலும்,  இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்போது, விபத்து மற்றும் அவச ரக்கால சிகிச்சை விரைவாக பெற முடி யும் என்றனர்.