கோவை, நவ.12- ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ‘60வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு’ வெள்ளியன்று நடை பெற்றது. இந்நிகழ்வில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் ஜவுளித் துறை வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. பிரதான குறையாக செஸ் வரியை முன் வைத்தனர். அடுத்த இரண்டு மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது. ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுறவுக்கென ஒரே ஆணையர் இருந்த நிலையில், ஜவுளித்துறைக்கென முதல் முறையாக தனி ஆணையர் நியமிக் கப்பட்டு ஜவுளித்துறை அமைப்பு களுடன் ஆலோசனை செய்யப் பட்டு அத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மானிய தொகையில் கட்ட டங்கள் கட்டவும் பயன்படுத்த அனு மதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து அர சாணை வெளியிடப்பட்ட நிலை யில், தற்போது 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித் துள்ளனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு விண்ணப்ப தாரர்கள் குறித்து ஆய்வு செய்து திட்டம் அமல்படுத்தப்படும்.
மேலும், தமிழக முதல்வர் சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அறிவித்து 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது. இந்தியாவில் தற்போது ஜவுளி துறையில் குஜ ராத்திற்கு அடுத்ததாக இரண் டாவது நிலையில் தமிழகம் உள்ளது. ஜவுளித்துறை மட்டு மின்றி அனைத்து துறை மேம் பாட்டிற்காகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத் தாத ஜவுளி உற்பத்திக்கு அரசு உறு துணையாக இருக்கும். ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சதவிகித இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி நவம்பர் வரை ரத்து செய்யப்பட் டுள்ளது. அதை நிரந்தரமாக நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி உள் ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதைச் செய்வ தாக ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள் ளோம். அனைத்து துறைகளையும் மேம்படுத்தி தமிழ்நாட்டை முன் மாதிரி மாநிலமாக கொண்டு செல்ல தமிழக முதல்வர் சிறப்பான நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார். அதை அமைச்சர்கள் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம் என் றார்.