உடுமலை, ஜுன் 1- உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத் திற்கு வியாழனன்று தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழ மாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு ஆகிய பழைய ஆயக் கட்டிற்குட்பட்ட 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், ஜுன் 1ஆம் தேதி முதல் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பும், 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்கு பயன்படுத்தப் படும். இதில், அமராவதி அணையில் இருந்து 2074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதை யடுத்து, ஆற்று மதகு வழியாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப் படும் என பொதுப்பணித்துறை அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அமராவதி அணை மொத்த 90 அடியில், 65.36 அடியாக உள்ளது. இதில் நீர்வரத்து 272 கன அடியாகவும் உள்ளது.